தென்னிலங்கையைச் சேர்ந்த நான்கு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக மரணம்! பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

Tragic accident in MP 3 children who had gone to attend the funeral procession died

பொலன்னறுவை – அரலகங்வில பஹல எல்ல வாவியில் மூழ்கி உயிரிழந்தவர்களுள் மூவர் பெண்கள் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

03 பெண்கள் உள்ளிட்ட நால்வர் இதன்போது உயிரிழந்துள்ளனர்.

பொலன்னறுவையில் ஏரி ஒன்றில் மூழ்கிய நிலையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலன்னறுவையில் உள்ள பஹல எல்ல ஏரியில் நீந்தச் சென்ற நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த நான்கு பேரும் இரத்மலானை பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version