image 4816a3cbed
இலங்கைசெய்திகள்

349 பட்டதாரிகள் சிறையில்!

Share

கடந்த வருடத்தில் மாத்திரம் 14,547 சிறைக் கைதிகளும், 62,426 சந்தேக நபர்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சிறைச்சாலைகள் திணைக்களம், அதில் 349 பட்டதாரிகளும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் படிப்படியாக அதிகரித்துள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

மொத்தமாக 349 பட்டதாரிகளும் உயர்தரத்தில் சித்தியடைந்த 5,395 கைதிகளும் சாதாரண தரத்தில் சித்தியடைந்த 17,616 கைதிகளும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் சிறையில் உள்ள 2.2% பேர் பாடசாலைக்குச் செல்லவில்லை என்று புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடிகிறது.

கடந்த ஆண்டு 16 வயதுக்குட்பட்ட 87 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன், 70 வயதுக்கு மேற்பட்ட சிறைக் கைதிகள் 436 பேர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 10 2
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் டிக்டாக் தடை நீங்கியது! புதிய சுயாதீன ஒப்பந்தம் மூலம் தீர்வு!

அமெரிக்காவில் பில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள டிக்டாக் (TikTok) செயலிக்கு விதிக்கப்படவிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அதன்...

MediaFile 9 2
இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் வரும் டி20 உலகக்கிண்ணம்! வடபுல கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகமான அறிவிப்பு!

இலங்கை மற்றும் இந்திய மண்ணில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள 10-ஆவது ஐசிசி (ICC) டி20 உலகக்கிண்ணக்...

IMG 20260123 WA0000
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு: போதைப்பொருளுடன் மேலும் ஒரு இளைஞர் கைது!

ஜிந்துப்பிட்டி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, கொழும்பு 13 பகுதியைச்...

Jhonson
இலங்கைசெய்திகள்

சதொச லொறி மோசடி: ஜோன்ஸ்டன் மற்றும் அவரது இரு மகன்களுக்கு ஜனவரி 30 வரை விளக்கமறியல் நீடிப்பு!

கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சதொச (Sathosa) நிறுவனத்திற்குச் சொந்தமான...