20 24
இலங்கைசெய்திகள்

கிழக்கின் அபிவிருத்திக்காக இந்தியா ஒதுக்கியுள்ள 2000 மில்லியன் ரூபாய்கள்

Share

கிழக்கின் அபிவிருத்திக்காக இந்தியா ஒதுக்கியுள்ள 2000 மில்லியன் ரூபாய்கள்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 33 அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மொத்தம் 2,371 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், சுற்றுலா மற்றும் சமூக அதிகாரமளித்தல் போன்ற முக்கிய துறைகளில் ஒதுக்கீடுகள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடுகளில் கல்விக்கு 315 மில்லியன், சுகாதாரத்திற்கு 780 மில்லியன், விவசாயத்திற்கு 620 மில்லியன் மற்றும் மீன்வளத்திற்கு 230 மில்லியன் ரூபாய்களும் உள்ளடங்குகின்றன.

அதன்படி, இந்தத் திட்டத்தைத் தொடர்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
22 8
செய்திகள்இலங்கை

பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

20 9
உலகம்செய்திகள்

டொராண்டோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு: கனடா காவல்துறையினர் தீவிர விசாரணை

கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தை இலக்கு வைத்து, இன்று (மார்ச் 10)...

19 7
உலகம்செய்திகள்

ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தும் அமெரிக்கா: பென்டகன் முக்கிய அறிவிப்பு!

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இன்று (மார்ச் 10) முன்னெப்போதும் இல்லாத வகையில்...