20 24
இலங்கைசெய்திகள்

கிழக்கின் அபிவிருத்திக்காக இந்தியா ஒதுக்கியுள்ள 2000 மில்லியன் ரூபாய்கள்

Share

கிழக்கின் அபிவிருத்திக்காக இந்தியா ஒதுக்கியுள்ள 2000 மில்லியன் ரூபாய்கள்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 33 அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மொத்தம் 2,371 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், சுற்றுலா மற்றும் சமூக அதிகாரமளித்தல் போன்ற முக்கிய துறைகளில் ஒதுக்கீடுகள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடுகளில் கல்விக்கு 315 மில்லியன், சுகாதாரத்திற்கு 780 மில்லியன், விவசாயத்திற்கு 620 மில்லியன் மற்றும் மீன்வளத்திற்கு 230 மில்லியன் ரூபாய்களும் உள்ளடங்குகின்றன.

அதன்படி, இந்தத் திட்டத்தைத் தொடர்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...