24 65fb98aaeaa52 1
இலங்கைசெய்திகள்

இலங்கை கடற்படையினரால் 31 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

Share

இலங்கை கடற்படையினரால் 31 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 31பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு (20.03.2024) இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தவகையில் 3 படகுகளில் வந்து நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 25 கடற்றொழிலாளர்களும், 2 படகுகளில் வந்து மன்னார் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட ஆறு கடற்றொழிலாளர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் காங்கேசன்துறை – மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

பின்னர் யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வள திணைக்களத்தினர் கடற்றொழிலாளர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...