அரசை பதவி விலகக் கோரி 3 நாட்கள் பாத யாத்திரை! – தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு

WhatsApp Image 2021 12 16 at 4.50.42 PM

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், மக்களின் தன்னெழுச்சி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் தேசிய மக்கள் சக்தி 3 நாட்கள் பாத யாத்திரையை முன்னெடுக்கவுள்ளது.

இதன்படி இன்று காலை 9 மணிக்கு, களுத்துறை – பேருவளை நகரில் குறித்த பாத யாத்திரை ஆரம்பமாகும்.

” ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டு மக்கள் போராடிவருகின்றனர். மக்களின் போராட்டம் வெற்றியளிக்கும். அதற்கு அரசியல் ரீதியான ஆதரவை வெளிப்படுத்துவதற்கும், போராட்ட இலக்கை அடைவதற்கும் பாத யாத்திரையை ஆரம்பிக்கின்றோம்.

இது தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டாலும் மக்களுக்கான போராட்டம். எனவே, அனைவரும் கட்சி பேதமின்றி பங்கேற்கவேண்டும். 19 ஆம் திகதி யாத்திரை கொழும்பை வந்தடையும்.” – என்றனர்.

#SriLankaNews

Exit mobile version