WhatsApp Image 2021 12 16 at 4.50.42 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசை பதவி விலகக் கோரி 3 நாட்கள் பாத யாத்திரை! – தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், மக்களின் தன்னெழுச்சி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் தேசிய மக்கள் சக்தி 3 நாட்கள் பாத யாத்திரையை முன்னெடுக்கவுள்ளது.

இதன்படி இன்று காலை 9 மணிக்கு, களுத்துறை – பேருவளை நகரில் குறித்த பாத யாத்திரை ஆரம்பமாகும்.

” ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டு மக்கள் போராடிவருகின்றனர். மக்களின் போராட்டம் வெற்றியளிக்கும். அதற்கு அரசியல் ரீதியான ஆதரவை வெளிப்படுத்துவதற்கும், போராட்ட இலக்கை அடைவதற்கும் பாத யாத்திரையை ஆரம்பிக்கின்றோம்.

இது தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டாலும் மக்களுக்கான போராட்டம். எனவே, அனைவரும் கட்சி பேதமின்றி பங்கேற்கவேண்டும். 19 ஆம் திகதி யாத்திரை கொழும்பை வந்தடையும்.” – என்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...