மன்னார் மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை மேலும் புதிதாக 26 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் 8 நாள்களில் மன்னார் மாவட்டத்தில் 165 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட கொரோனா தொற்று நிலவர அறிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேலும் புதிதாக 26 கொரோனாத் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த வாரத்தில் மாத்திரம் 165 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி -இந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் ஆயிரத்து 832 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை 22 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி இறந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a comment