Parliament SL 2 1 1000x600 1
அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய அமைச்சரவையில் 25 அமைச்சர்கள்!!

Share

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் 20 முதல் 25 வரையான அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தொழில்சார் நிபுணர்களுக்கும் அமைச்சரவையில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

பிரதமர் பதவிக்கு தினேஷ் குணவர்தனவின் பெயரை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பரிந்துரைத்துள்ளது.

எனினும், அனைத்து கட்சிகளின் பங்களிப்புடன் சர்வக்கட்சி அரசொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி முயற்சித்துவருவதால் பிரதமர் பதவி குறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
சம்பிக்க ரணவக்கவின் பெயரும் பரிந்துரையில் உள்ளது.

அத்துடன், பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு பிரதமர் பதவியை வழங்கினால், போராட்டக்காரர்களை ஓரளவுக் கட்டுப்படுத்த முடியும் என்ற யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவையில் ஈபிடிபி, இ.தொ.கா. என்பவற்றுக்கு அமைச்சு பதவிகள் உறுதியாகியுள்ளன. ஜனாதிபதி இன்று பதவியேற்ற பிறகு, அடுத்தக்கட்ட நகர்வுகள் தீவிரமாக இடம்பெறும்.

அதேவேளை, ஆளுநர் பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறவுள்ள அதேவேளை, வெளிவிவகாரத்துறை மற்றும் பாதுகாப்பு துறையிலும் சில மறுசீரமைப்புகள் செய்யப்படவுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...