அரசியலமைப்பிற்கான உத்தேச 21ஆவது திருத்தச்சட்டமூலம், அமைச்சரவையில் இன்று (06) முன்வைக்கப்படவுள்ளது.
உத்தேச 21ஆவது திருத்தச்சட்டமூலத்தை, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, இரு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.
குறித்த சட்டமூலத்தை கட்சி தலைவர்களுக்கு பகிர்ந்தளித்து, கட்சிகளின் கோரிக்கைகள் மற்றும் யோசனைகளை உள்வாங்கி, இறுதிப்படுத்தப்பட்ட சட்டமூலத்தை ஜுன் 06 ஆம் திகதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டது.
இதற்கிடையில் இரு தடவைகள் சர்வக்கட்சி கூட்டமும் பிரதமர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையிலேயே இறுதிப்படுத்தப்பட்ட 21 ஆவது திருத்தச்சட்டமூலம், ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றத்தில் பதவி வகிப்பதற்கு தடை விதிக்கும் யோசனையில் திருத்தம் உள்வாங்கப்படவில்லை.
ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சு பதவியை மட்டும் வகிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு தனது இஷ்டப்படி பிரதமரை, பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அனுமதியுடனேயே பிரதமரை ஜனாதிபதி பதவி நீக்கலாம் என்ற ஏற்பாடு உள்வாங்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment