அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் 6 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்படும் – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாளை (03) சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இச்சந்திப்பையடுத்து 21 ஆவது திருத்தச்சட்டமூலம் இறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகன்றது. அதன்பின்னர் திங்களன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படும்.
அதேவேளை ,மொட்டு கட்சி எம்.பிக்களுக்கும், நிதி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.
#SriLankaNews
Leave a comment