IMG 20220527 WA0035
அரசியல்இலங்கைசெய்திகள்

21ஐ விரைவில் நிறைவேற்றுங்கள்! – கட்சித் தலைவர்கள் வலியுறுத்து

Share

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டம் வெகுவிரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

21ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான கட்சித் தலைவர்கள் கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிரதமர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது 21 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின், யோசனைகள் பெறப்பட்டன.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் கூடிய விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பொதுவான ஒருமித்த கருத்து இதன்போது எட்டப்பட்டது.

இன்றைய கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கலந்து கொள்ள முடியாத காரணத்தினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வருகையுடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (3) இறுதிக் கூட்டமொன்றை நடாத்தி வரைபை பூர்த்தி செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த வாரத்தில் ஏதேனும் ஒரு தரப்பினர் மேலதிக விளக்கத்தைப் பெற விரும்பினால் நீதி அமைச்சரிடம் அதனைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் பிரதமர் அறிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...