IMG 20220527 WA0035
அரசியல்இலங்கைசெய்திகள்

21ஐ விரைவில் நிறைவேற்றுங்கள்! – கட்சித் தலைவர்கள் வலியுறுத்து

Share

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டம் வெகுவிரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

21ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான கட்சித் தலைவர்கள் கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிரதமர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது 21 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின், யோசனைகள் பெறப்பட்டன.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் கூடிய விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பொதுவான ஒருமித்த கருத்து இதன்போது எட்டப்பட்டது.

இன்றைய கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கலந்து கொள்ள முடியாத காரணத்தினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வருகையுடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (3) இறுதிக் கூட்டமொன்றை நடாத்தி வரைபை பூர்த்தி செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த வாரத்தில் ஏதேனும் ஒரு தரப்பினர் மேலதிக விளக்கத்தைப் பெற விரும்பினால் நீதி அமைச்சரிடம் அதனைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் பிரதமர் அறிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...

world 54
செய்திகள்இலங்கை

நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடக்கம்; ஈரானின் கடும் விமர்சனம்!

இஸ்ரேலில் ஈரான் உடனான போர் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...

world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...