சனத் ஜயசூரிய
அரசியல்இலங்கைசெய்திகள்

’20’ இற்கு உடன் முடிவுகட்டுங்கள்! – ஜயசூரிய வலியுறுத்து

Share

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை இரத்துச் செய்ய வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், 20ஆவது திருத்தத்தை நீக்குவது அரசின் நேர்மைத் தன்மையை அறிந்துகொள்ளப் பயன்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசை மேலும் கடுமையாகச் சாடியுள்ள அவர், புதிய அரசு பதவியேற்று இரண்டு வாரங்கள் கடந்த போதிலும் உறுதியான எதுவும் இடம்பெறவில்லை என்பது கவலையளிக்கின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“எங்கள் மக்கள் இன்னும் வரிசையில் நிற்கின்றார்கள். அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், தயவு செய்து மக்களின் துன்பங்களை மறந்துவிடாதீர்கள்” – என்று சனத் ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...