16
இலங்கைசெய்திகள்

பாதாள உலகக் குழுவினருடன் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தொடர்பு! பகிரங்கப்படுத்திய அநுர தரப்பு

Share

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் பல்வேறு குற்றச்செயல்களைச் செய்யும் பொருட்டு பாதாள உலக குழுக்களை பயன்படுத்தியுள்ளதாகக் பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வடகல குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, ‘கோனவல சுனில்’ என்ற பாதாள உலக உறுப்பினரை பயன்படுத்தி, உச்ச நீதிமன்ற நீதிபதியின் வீட்டின் மீது கற்கள் வீச வைத்தார்,” என அவர் தெரிவித்துள்ளார்.

மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, பாதாள உலக தலைவர்களை வழிநடத்தி, ஊடகவியலாளர் ரிச்சர்ட் டி சொய்சாவை கடத்திச் சென்று படுகொலை செய்தார் என குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையில், ரிச்சர்ட் டி சொய்சா பற்றிய ‘ராணி’ திரைப்படம் வெளியிடப்பட உள்ளது எனவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த திரைப்படத்தை ரகசியமாக பார்வையிட்டு, அவருடைய தந்தை ஜனாதிபதி பதவியில் இருந்தபோது என்ன நடந்தது என்பதைக் கண்டறியுமாறு கோருவதாக சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜுலம்பிட்டியே அமரே மற்றும் வம்பொட்டா போன்ற பாதாள உலக உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார் என மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜுலம்பிட்டியே அமரே, ஒருகாலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அவர்களின் பாதுகாப்பாளராகவும் பணியாற்றினார்,” என சுனில் வடகல நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...