18 17
இலங்கைசெய்திகள்

சஞ்சீவ கொலை வழக்கு: மில்லியன் ரூபாய் சன்மானம் – காவல்துறை அறிவிப்பு

Share

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பில் தலைமறைவாகியுள்ள இஷார செவ்வந்தி என்ற பெண் சந்தேக நபரைப் பற்றி துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.

குறித்த விடயத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்ற பிரதான சந்தேகநபருக்கு உதவி புரிந்த குற்றத்திற்கு தேடப்படும் சந்தேக நபரான பெண்ணின் மேலும் பல புகைப்படங்களை காவல்துறையினர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

புதுக்கடை நீதிமன்றத்தினுள் பெப்ரவரி 19 ஆம் தேதி கணேமுல்ல சஞ்சீவ என்ற சஞ்சீவ குமார சமரரத்ன என்ற ஒரு திட்டமிட்ட கும்பலின் குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை கோரி, காவல்துறை இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

25 வயதுடைய பின்புர தேவகே இஷாரா சேவ்வந்தி என்ற சந்தேகநபர், தேசிய அடையாள அட்டை எண் 995892480V, 243/01, நீர்கொழும்பு வீதி, ஜெயா மாவத்தை, கட்டுவெல்லேகமவில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, கொழும்பு குற்றப்பிரிவு தற்போது சர்ச்சைக்குரிய கொலை தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், மேற்கண்ட சந்தேக நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவு (CCD) இயக்குநர் – 071-8591727

CCD பொறுப்பதிகாரி – 071-8591735

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...