18 17
இலங்கைசெய்திகள்

சஞ்சீவ கொலை வழக்கு: மில்லியன் ரூபாய் சன்மானம் – காவல்துறை அறிவிப்பு

Share

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பில் தலைமறைவாகியுள்ள இஷார செவ்வந்தி என்ற பெண் சந்தேக நபரைப் பற்றி துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.

குறித்த விடயத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்ற பிரதான சந்தேகநபருக்கு உதவி புரிந்த குற்றத்திற்கு தேடப்படும் சந்தேக நபரான பெண்ணின் மேலும் பல புகைப்படங்களை காவல்துறையினர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

புதுக்கடை நீதிமன்றத்தினுள் பெப்ரவரி 19 ஆம் தேதி கணேமுல்ல சஞ்சீவ என்ற சஞ்சீவ குமார சமரரத்ன என்ற ஒரு திட்டமிட்ட கும்பலின் குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை கோரி, காவல்துறை இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

25 வயதுடைய பின்புர தேவகே இஷாரா சேவ்வந்தி என்ற சந்தேகநபர், தேசிய அடையாள அட்டை எண் 995892480V, 243/01, நீர்கொழும்பு வீதி, ஜெயா மாவத்தை, கட்டுவெல்லேகமவில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, கொழும்பு குற்றப்பிரிவு தற்போது சர்ச்சைக்குரிய கொலை தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், மேற்கண்ட சந்தேக நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவு (CCD) இயக்குநர் – 071-8591727

CCD பொறுப்பதிகாரி – 071-8591735

Share
தொடர்புடையது
WhatsApp Image 2024 08 02 at 17.13.20
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பெற்றோருக்குச் சுமையற்ற, நவீன கல்வி முறை – ஜனாதிபதி அநுர குமார!

பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையையும், பிள்ளைகளுக்குத் துயரத்தையும் தராத ஒரு புதிய கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக...

images 2026 01 03t094503424 26244
உலகம்செய்திகள்

Grok AI-க்கு உலகளாவிய தடை மற்றும் கட்டுப்பாடுகள்: ‘டீப்ஃபேக்’ விவகாரத்தால் ஈலான் மஸ்க் பணிந்தார்!

ஈலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘Grok’ செயற்கை நுண்ணறிவுத் தளம், பெண்கள் மற்றும் சிறுவர்களின் புகைப்படங்களைத் தவறாகச்...

MediaFile 8 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் ஊழல் நிறைந்தது: அமைச்சர் குமார ஜயகொடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க சவால்!

தற்போதைய அரசாங்கத்தின் நிலக்கரி விலைமனுக் கோரலில் (Coal Tender) பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள...

1500x900 44538875 ipl2026
விளையாட்டுசெய்திகள்

ஐ.பி.எல் 2026: சின்னசுவாமி மைதானத்திலிருந்து வெளியேறுகிறது ஆர்.சி.பி! – ராஜஸ்தான் அணியும் இடம் மாறுகிறது.

ஐ.பி.எல் 2026 தொடரில் முன்னணி அணிகளான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ்...