25 67b98949f2b6b 1
இலங்கைசெய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலையை முன்பே அறிந்திருந்த காவல்துறை! வெளியான தகவல்

Share

கணேமுல்ல சஞ்சீவ படுகொலையை முன்பே அறிந்திருந்த காவல்துறை! வெளியான தகவல்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்படுவதற்கு முன்பாகவே அவரை கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் கிடைத்ததாக பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியாளார் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எனினும், அவர் கொழும்பில் சுட்டுக் கொல்லப்படுவார் என தகவல் கிடைக்கவில்லை என்றும் கம்பஹா நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்படுவார் என்ற தகவல் மாத்திரமே கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கம்பஹா நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை அங்கு முன்னிலைப்படுத்தவில்லை என்றும் பதில் காவல்துறை மா அதிபர் கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து, தகவல் கிடைத்தவுடன், கம்பஹா பிரிவு பொறுப்பதிகாரியிடம், நீதிபதிக்கு தகவல் தெரிவிக்கவும், நீதிமன்ற நடவடிக்கைகளை ரத்து செய்யவும், மெய்நிகர் முறையில் சாட்சியங்களை வழங்க அனுமதிக்க பேசியதாகவும் அன்றையதினம் சஞ்சீவ நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டமைக்கான காரணம் குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவத்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...