3 41
இலங்கைசெய்திகள்

சிறீதரன் மீது பயங்கரவாத தடைச் சட்டம் பாய்ந்ததா – சபையில் கேள்வி எழுப்பிய எம்.பி

Share

சிறீதரன் மீது பயங்கரவாத தடைச் சட்டம் பாய்ந்ததா – சபையில் கேள்வி எழுப்பிய எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு விமான நிலையத்தில் இடம்பெற்ற விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem ) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (21.1.2025) உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) விமான நிலையத்தில் தடுக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் நானும் அங்கு இருந்தேன்.

குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அவருக்கு எதிராக பயணத்தடை உள்ளதாக கூறினர்.

அதனை தொடர்ந்து கலந்துரையாடி நாம் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தோம். இத்தகைய விடயங்கள் காணப்படின் நீதிமன்றத்தின் உத்தரவு அவசியம்.

ஆனால் அதிகாரிகள் அவருடைய நாடாளுமன்ற வரப்பிரசாதத்தை மீறும் வகையில் செயற்பட்டுள்ளனர். அரசாங்கம் இன்னமும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு இந்த விடயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem ) தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...