2 13
இலங்கைசெய்திகள்

2025 இல் ஏற்படப்போகும் பாரிய குழப்பம்: எச்சரித்துள்ள ரணில் தரப்பு

Share

2025 இல் ஏற்படப்போகும் பாரிய குழப்பம்: எச்சரித்துள்ள ரணில் தரப்பு

2025ஆம் ஆண்டு நாட்டில் பாரிய குழப்பமொன்றை பார்த்துக்கொள்ள முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Wajira Abeywardana) தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் காலி (Galle) மாவட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றுக்கு புதிதாக தெரிவு செய்யப்படவுள்ள திசைக்காட்டி குழுவானது, நாட்டில் இடதுசாரி இயக்கத்தை நிரந்தரமாக அழித்தொழிக்கும் என வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “ நீங்கள் பொருளாதாரத்தில் சிக்கித் தவித்த போது உங்களை விடுவித்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

உலகின் சக்தி வாய்ந்த நபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் முடிவடைந்தது, டொனால்ட் ட்ரம்பிற்கு 78 வயதாகிறது.

எங்கள் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் நாட்டைப் பன்னிரண்டு வருடங்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும்.நமது சிந்தனைகளை விடவும் அவருது சிந்தனை சிறந்தது.

வங்குரோத்து நாடு மிகவும் சிரமப்பட்டு இரண்டு வருடங்களில் விடுவிக்கப்பட்டது எமது அரசாங்கம் உருவாக்கிய பாதையில் இருந்து இவர்கள் வெளியேறினால் மீண்டும் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டியிருக்கும்.” என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...