2 13
இலங்கைசெய்திகள்

2025 இல் ஏற்படப்போகும் பாரிய குழப்பம்: எச்சரித்துள்ள ரணில் தரப்பு

Share

2025 இல் ஏற்படப்போகும் பாரிய குழப்பம்: எச்சரித்துள்ள ரணில் தரப்பு

2025ஆம் ஆண்டு நாட்டில் பாரிய குழப்பமொன்றை பார்த்துக்கொள்ள முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Wajira Abeywardana) தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் காலி (Galle) மாவட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றுக்கு புதிதாக தெரிவு செய்யப்படவுள்ள திசைக்காட்டி குழுவானது, நாட்டில் இடதுசாரி இயக்கத்தை நிரந்தரமாக அழித்தொழிக்கும் என வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “ நீங்கள் பொருளாதாரத்தில் சிக்கித் தவித்த போது உங்களை விடுவித்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

உலகின் சக்தி வாய்ந்த நபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் முடிவடைந்தது, டொனால்ட் ட்ரம்பிற்கு 78 வயதாகிறது.

எங்கள் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் நாட்டைப் பன்னிரண்டு வருடங்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும்.நமது சிந்தனைகளை விடவும் அவருது சிந்தனை சிறந்தது.

வங்குரோத்து நாடு மிகவும் சிரமப்பட்டு இரண்டு வருடங்களில் விடுவிக்கப்பட்டது எமது அரசாங்கம் உருவாக்கிய பாதையில் இருந்து இவர்கள் வெளியேறினால் மீண்டும் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டியிருக்கும்.” என்றார்.

Share
தொடர்புடையது
IMG 20251228 WA0012
செய்திகள்இலங்கை

இலங்கையில் அவசரகால நிலை மேலும் நீடிப்பு: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

டிட்வா சூறாவளியின் பின்னர் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால நிலை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 28...

Public Security Minister
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் மீதான நிதி மோசடி வழக்கு: சிஐடியின் சட்ட நடைமுறைகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் ஆனந்த விஜேபால!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி மோசடி விசாரணைகளில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID)...

IMG 20231218 16244935
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவில் கனமழை: முத்தையங்கட்டு குளம் வான்பாயும் அபாயம் – பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

முல்லைத்தீவு, நைனமடு பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக முத்தையங்கட்டு குளத்தின் நீர்மட்டம் வேகமாக...

24 6628d315dc43c
செய்திகள்இலங்கை

தரம் 6 பாடப்புத்தகத்தில் ஆபாச இணைய முகவரி: கல்வி அமைச்சின் செயலாளரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் தரம் 6 மாணவர்களுக்காக அச்சிடப்பட்ட ஆங்கிலப் பாடப்புத்தகங்களில், ஆபாச இணையத்தளம்...