1 32
இலங்கைசெய்திகள்

இலங்கை-இந்திய கப்பல் சேவை ஜனவரி முதல் மீண்டும் ஆரம்பம்

Share

இலங்கை-இந்திய கப்பல் சேவை ஜனவரி முதல் மீண்டும் ஆரம்பம

இடைநிறுத்தப்பட்டுள்ள இலங்கை-இந்திய கப்பல் சேவையானது ஜனவரி தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் இலங்கை இடையே மிக நீண்டகாலமாக இடம்பெற்று வந்த கப்பல் சேவை, கடந்த காலத்தில் நிலவிய யுத்தம் காரணமாக சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

கடந்த 2023ம் ஆண்டு பல்வேறு தரப்பினரின் பலத்த முயற்சி காரணமாகக் குறித்த கப்பல் சேவை மீண்டும் ஆரம்பமானது. எனினும் வட-கிழக்கு பருவமழை காரணமாக சமீப நாட்களாக குறித்த கப்பல் சேவை இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், எதிர்வரும் ஜனவரி 02ம் திகதி தொடக்கம் இலங்கை-இந்திய கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், அதற்கான முன்பதிவுகள் டிசம்பர் 25ம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...