16 32
இலங்கைசெய்திகள்

இலங்கை அணிக்கு 187 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

Share

இலங்கை அணிக்கு 187 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இலங்கை (Srilanka) அணிக்கும் நியூசிலாந்து (New Zealand) அணிக்கும் இடையிலான இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் மார்க் சேப்மன் (Mark Chapman) அதிகபட்சமாக 42 ஓட்டங்களையும் Tim Robinson மற்றும் Mitchell Hay ஆகியோர் தலா 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் வனிந்து அசரங்க (Wanindu Hasaranga) 02 விக்கெட்டுக்களையும், நுவன் துஷார (Nuwan Thushara), மதீஷா பத்திரன (Matheesha Pathirana) ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தியுள்ளனர்.

இதன்படி இலங்கை அணிக்கு 187 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியானது ஒருநாள் மற்றும் ரி20 விளையாடுதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இரு அணிகளுக்கிடையில் 3 போட்டிகள் கொண்ட ரி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என்பன நடைபெறவுள்ளன.

அதன் படி முதல் தொடராக ரி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 சர்வதேச தொடரின் இரண்டாவது போட்டி இன்று இலங்கை நேரப்படி முற்பகல் 11.45 மணிக்கு மவுங்கானுவில் அமைந்துள்ள பேய் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

முதல் போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி இன்றைய போட்டியில் நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் என்ற முனைப்புடன் களமிறங்கவுள்ளது.

Share
தொடர்புடையது
1529934317 gun gunshot 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பத்தரமுல்லையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு! – ஜீப் வாகனத்தில் இருந்த தம்பதியினர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!

கொழும்பு – பத்தரமுல்லை, அக்குரேகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர்...

25 679d968d808df
இலங்கைசெய்திகள்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

குடா வஸ்கடுவ பகுதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கில்,...

26 69858a214d488
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரசாயனப் பொருளை சுவாசித்த 19 பேர் பாதிப்பு! – மொரட்டுவை பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மொரட்டுவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் போது, வெளியேறிய இரசாயனப்...

1770972444 seine 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 9-வது நாளாக மீனவர் போராட்டம்! – தீர்வு காண ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கொளுத்தும் வெயிலையும் பாரிய மழையையும் பொருட்படுத்தாது மீனவர்கள் முன்னெடுத்து...