14 30
இலங்கைசெய்திகள்

2025ஆம் ஆண்டில் கட்சியை மறுசீரமைக்க தயாராகும் மொட்டு தரப்பு

Share

2025ஆம் ஆண்டில் கட்சியை மறுசீரமைக்க தயாராகும் மொட்டு தரப்பு

எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் விரிவான மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன(SLPP) கட்சியை பலப்படுத்தவுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இந்திக்க அனுருத்த ஆகியோரின் தலைமையில் மேலும் இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் கூறியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் கட்சி வீழ்ச்சியடைந்த போதிலும், எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கட்சியில் சில புத்துணர்ச்சி காணப்பட்டதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியை புதிய பாதையில் முன்னோக்கி கொண்டு செல்வதற்கும், கட்சியை தனிப் பிரதான கட்சியாக எதிர்கொள்ளும் வகையில் வலுப்படுத்துவதற்கும் அடிமட்ட மற்றும் கிராம மட்டத்தில் உள்ள உறுப்பினர்களை தெளிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், கட்சி வீழ்ச்சியடைந்த போது கட்சியை விட்டு வெளியேறாதவர்கள் பாதிக்கப்படாத வகையில் மீள்சேர்க்கப்படவுள்ளதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...