23 10
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய குடும்பத்தை அள்ளிச் சென்ற கடல் அலை

Share

இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய குடும்பத்தை அள்ளிச் சென்ற கடல் அலை

இலங்கைக்கு(sri lanka) சுற்றுலா வந்த ரஷ்ய குடும்பம் நீராடச் சென்ற நிலையில் கடல் அலை இழுத்துச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ரஷ்யாவைச்(russia) சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும் அவருடைய 39 வயதுடைய மனைவி மற்றும் 07 மற்றும் 13 வயதுடைய இரு பெண் பிள்ளைகள் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

இவ்வாறு வந்த இவர்கள் ஹிக்கடுவை கடற்கரையில் நீராடச் சென்றுள்ளனர்.இதன்போது அவர்கள் நால்வரையும் கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது.

எனினும் அங்கு கடமையில் இருந்த ஹிக்கடுவை காவல்துறை உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு குறித்த நால்வரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஹிக்கடுவை காவல் நிலையத்திற்குட்பட்ட காவல்துறை உயிர்காப்பு பிரிவின் காவல்துறை பரிசோதகர் ஹேவகே, காவல்துறை கான்ஸ்டபிள் 96793 ஏக்கநாயக்க, காவல்துறை கான்ஸ்டபிள் 102748 திஸாநாயக்க மற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் 105456 ஜயசிங்க ஆகியோரால் இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...