6 38
இலங்கைசெய்திகள்

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

Share

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

அந்தோனிப்பிள்ளை மன்னார் (Mannar) மறைமாவட்டத்தின் புதிய ஆயராக தற்போது மருதமடு அன்னை திருத்தல பரிபாலகராக பணியாற்றிவரும் அருட்தந்தை ஞானப்பிரசாகம் அந்தோனிப்பிள்ளை திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு தொடக்கம் மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக பணியாற்றிய பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ 76 வயதில் ஓய்வு பெற்றதை தொடர்ந்து அம்மறைமாவட்டத்திற்கு மன்னார் மறைமாவட்ட குருவாகிய அருட்தந்தை ஞானப்பிரசாகம் அந்தோனிப்பிள்ளை புதிய ஆயராக திருத்தந்தை பிரான்சிஸால் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருத்தந்தையின் இந்நியமன செய்தி மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட குருக்களுக்கென ஒழுங்குபடுத்தப்பட்ட சிறப்பு கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோவினால் உத்தியோகபூர்வமாக இன்று (14) மாலை வாசிக்கப்பட்டது.

மேலும், புதிய ஆயராக நியமனம்பெற்ற அருட்தந்தை ஞானப்பிரசாகம் அந்தோனிப்பிள்ளை மன்னார் மறைமாவட்ட குருக்களிலிருந்து நியமனம்பெற்ற முதலாவது ஆயரென்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...