20 11
இலங்கைசெய்திகள்

போதியளவு எரிபொருள் கையிருப்பில்! பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விளக்கம்

Share

போதியளவு எரிபொருள் கையிருப்பில்! பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விளக்கம்

நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையில் பயன்படுத்தக் கூடிய எரிபொருட்கள் கையிருப்பில் உள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜானக ராஜகருணா(Janaka Rajakaruna) தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட எரிபொருள் கப்பல் ஒன்று திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட எரிபொருள் கப்பல் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமானது அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு சொந்தமான யுனைடட் பெட்ரோலியம் நிறுவனத்தினால் கடந்த 2ஆம் திகதி தருவிக்கப்பட்ட எரிபொருள் கப்பல் இவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் தலா 15000 மெற்றிக்தொன் எடையுடைய பெட்ரோல் மற்றும் டீசல் கொண்டு வரப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் உள்ளகப் பிரச்சினை காரணமாக எரிபொருள் கப்பல் தரையிறக்கப்படாது திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...