22 8
இலங்கைசெய்திகள்

இலங்கையில் தேங்காய் தட்டுப்பாடு..! வெளியானது காரணம்

Share

இலங்கையில் தேங்காய் தட்டுப்பாடு..! வெளியானது காரணம்

நாடு தற்போது எதிர்நோக்கும் தேங்காய் நெருக்கடிக்கு தேங்காய் ஏற்றுமதியும் இலங்கையில் தேங்காய் ஏற்றுமதிக்கான தேவையும் தான் காரணம் என சோசலிச கட்சியின் கல்விச் செயலாளரும், மக்கள் போராட்டக் கூட்டமைப்பின் தேசிய நிறைவேற்று உறுப்பினருமான புபுது ஜயகொட (Pubudu Jayagoda)இன்று (9) தெரிவித்தார்.

இலங்கையில் தேங்காய் ஏற்றுமதி 800 மில்லியனில் இருந்து 1,400 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு லயன்ஸ் கழகத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே புபுது ஜயகொட மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 3,100 மில்லியன் தேங்காய் விளைச்சல் இடம்பெறுவதாகவும், இந்த ஆண்டு சுமார் 700 மில்லியன் தேங்காய் விளைச்சல் குறைந்தது பிரச்சினையாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.

நாட்டின் வருடாந்த நுகர்வுக்கு சுமார் 2,100 மில்லியன் தேங்காய்கள் தேவைப்படுவதாகத் தெரிவித்த ஜயகொட, எஞ்சிய தேங்காய் அறுவடையில் சுமார் 800 மில்லியன் தேங்காய் நாட்டின் பாவனைக்காகப் பயன்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேங்காய் ஏற்றுமதி செய்வதன் மூலம் தொழிலதிபர்கள் பெரும் லாபம் ஈட்டி வருவதாகவும், தேங்காய் ஏற்றுமதி மூலம் நாட்டுக்கு ஆண்டுதோறும் 400 முதல் 600 மில்லியன் டொலர்கள் வரை வருமானம் கிடைப்பதாகவும் அவர் கூறினார்.

சுமார் 700 மில்லியன் தேங்காய் விளைச்சல் குறைவடைந்துள்ளமை குறுகிய காலப் பிரச்சினையல்ல எனத் தெரிவித்த புபுது ஜயகொட, நாட்டில் தென்னை விளைச்சலைப் பாதிக்கும் பல நீண்டகால விளைவுகள் காணப்படுவதாக மேலும் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...