7 47
இலங்கைசெய்திகள்

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

Share

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

இன்று (30.10.2024) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.

 

தொடருந்து நிலைய அதிபர்கள் அடுத்த 72 மணி நேரத்துக்குள் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர்.

 

நடைமுறைகளை மீறி தொடருந்து நிலைய அதிபர்களை நியமித்தமைக்கு எதிராகவே குறித்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.

 

குறித்த தகவல்களை இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMU) தெரிவித்துள்ளது.

 

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் தொடருந்து கட்டுப்பாட்டாளர்களை குறித்த பதவிகளுக்கான பரீட்சைகளை நடத்தி நியமிப்பதற்கும் அல்லது பதவி உயர்வு வழங்கி சம்பள உயர்வு வழங்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

ஆயினும் குறித்த நடைமுறைக்கு மாறாக தற்போது இடம்பெறுவதாக தெரிவித்தே இந்த தொழிற்சங்க போராட்டம் எதிர்வரும் 72 மணித்தியாலங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
1732463885 students in flood 6
செய்திகள்இலங்கை

சீரற்ற காலநிலை பாதிப்பு: 18 மாவட்டங்கள் பாதிப்பு; மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக, 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது....

MediaFile 7
இலங்கைசெய்திகள்

புழல் சிறையில் உள்ள இலங்கையருக்கு அடிப்படை மருத்துவ உதவி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை விசாரணைக் கைதிகளுக்குத் தேவையான அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க...

image 5b342b3cea
செய்திகள்இலங்கை

வங்கக்கடல் வானிலை காரணமாக நாகப்பட்டினம்-இலங்கை கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து

வங்கக்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாகப்பட்டினம் – இலங்கை (காங்கேசன்துறை) இடையேயான பயணிகள் கப்பல்...

srilankan airline 300x157 1
செய்திகள்இலங்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்களைத் தாக்கிய சவுதி பிரஜை கைது

சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில்...