27 8
இலங்கைசெய்திகள்

கொழும்பு நோக்கி சென்ற விரைவு தொடருந்தில் தீ விபத்து

Share

கொழும்பு நோக்கி சென்ற விரைவு தொடருந்தில் தீ விபத்து

களுத்துறையில் இருந்து கொழும்பு, மருதானை நோக்கி செல்லும் விரைவு தொடருந்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ரயிலின் பின் எஞ்சின் ஒரு பகுதியில் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்

தீயினால் இயந்திரம் பாரியளவில் சேதமடையவில்லை, தற்போது தொடருந்து தெற்கு களுத்துறை நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தீப்பற்றிய தொடருந்தில் பயணித்த பயணிகள் மற்றுமொரு தொடருந்து மூலம் மருதானை தொடருந்து நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...