16 5
இலங்கைசெய்திகள்

தனியார் பேருந்து நடத்துனரை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய உரிமையாளர்

Share

தனியார் பேருந்து நடத்துனரை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய உரிமையாளர்

தனியர் பேருந்து ஒன்றில் நடத்துனராக கடமையாற்றி வந்த இளைஞர் ஒருவர் பணத்தை திருடியதாக கூறி உரிமையாளரால் தாக்கப்பட்ட சம்பவம் மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியில் குறித்த சம்பவம் நேற்று(07.10.2024) இடம்பெற்றுள்ளது

இது தொடர்பில், தெரியவருவதாவது களுவாஞ்சிக்குடி மகிளுர் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையானரின் பேருந்தானது கல்முனை – மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவருகிறது.

குறித்த பேருந்தின் நடத்துனராக அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞன் ஒருவர் கடமையாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பேருந்தில் இருந்து பணத்தை திருடியதாக கூறி நடத்துனர் மீது அதன் உரிமையாளர் குற்றச்சாட்டு தெரிவித்து கடமையில் இருந்த அவரை சம்பவதினமான நேற்று பகல் ஒந்தாச்சிமடம் பிரதான வீதியிலுள்ள பாழடைந்த காணி ஒன்றிற்குள் இழுத்துச் சென்று அங்கிருந்த தென்னை மரத்தில் கட்டிவைத்து கட்டையால் தாக்கியுள்ளார்.

இதனை கண்ட பொதுமக்கள் கடும் கவலை தெரிவித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்துக்கு பொலிஸார் வருகைத்தந்த நிலையில் கட்டிவைத்து அடித்தவரை அங்கிருந்து மீட்டுள்ளனர்.

இது தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
FB IMG 1768978130584 1024x675 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அதிர்ச்சித் தகவல்: கொழும்பு பேருந்து ஓட்டுநர்களில் 60% பேர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை? – அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை!

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஓட்டுநர்களில் சுமார் 60...

24 66f87c7462569
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் கல்வித்துறையில் டிஜிட்டல் புரட்சி: பாதுகாப்பான ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்க பிரதமர் ஹரிணி திட்டம்!

இலங்கையின் கல்வித்துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாகவும், மாணவர்களின்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில்...

grok
செய்திகள்உலகம்

எக்ஸ் தளத்தின் Grok AI மீது ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி விசாரணை: சிறுவர்களின் புகைப்படங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு!

ஈலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘எக்ஸ்’ (X) தளத்தின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான ‘Grok’, பெண்கள் மற்றும்...

1764736123 DITWAH 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சூறாவளி நிவாரணப் பணிகள் நிறைவடையும் தருவாய்: 4 இலட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்குச் சுத்திகரிப்புக் கொடுப்பனவு வழங்கல்!

சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடு மற்றும் நிவாரண உதவிகள் வழங்கும் செயல்முறை தற்போது நிறைவடையும் தருவாயில்...