2 47
இலங்கைசெய்திகள்

மக்கள் மீண்டும் வரிசையில் காத்திருக்க நேரிடும்! எச்சரிக்கை விடுக்கும் ஜனாதிபதி

Share

மக்கள் மீண்டும் வரிசையில் காத்திருக்க நேரிடும்! எச்சரிக்கை விடுக்கும் ஜனாதிபதி

எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் மக்கள் மீண்டும் வரிசையில் காத்திருக்க நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தை மாற்றி சஜித் பிரேமதாச அல்லது அனுர திஸாநாயக்க ஆகியோரில் யாரையேனும் ஜனாதிபதியாக தெரிவு செய்தால் நாட்டில் மீண்டும் நெருக்கடி நிலை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் சட்டத்தரணிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் திருத்தங்களைச் செய்ய முயற்சித்தால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

18 நாடுகள், சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி உள்ளிட்டனவற்றுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கையின் பிரகாரமே எதிர்காலத்தில் செயற்பட வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் மட்டும் பேசி பயனில்லை, நாடுகளுடனும் பேச வேண்டியுள்ளது எனவும் நாடுகளுடன் பேசுவது சுலபமானதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கைகளை திருத்தி அமைத்தால் நாட்டில் மீண்டும் வரிசை யுகம் உருவாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Pregnant Child 1200px 25 07 18 1 1000x600 1
செய்திகள்இலங்கை

கர்ப்பிணித் தாய்மார்கள் போதைப்பொருள் பாவனை: குழந்தைகளின் அபாயம் குறித்து அமைச்சர் சரோஜா போல்ராஜ் எச்சரிக்கை!

சமீபகாலமாகப் பெண்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது அதிகரித்து வருவதாகவும், குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

Nine Arch Bridge Ella Sri Lanka 35 1
செய்திகள்இலங்கை

ஒன்பது வளைவுப் பாலம் விளக்குத் திட்டம் ஒத்திவைப்பு: தனியாரின் நிலப் பிரச்சினை காரணம்!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில்...

articles2FjYITDpH4jwEQ9VfnNT42
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் புதிய கிளை அலுவலகம் இன்று திறந்து வைப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளைக்கான புதிய அலுவலகம் இன்று (நவம்பர் 23) காலை,...

images 5 1
செய்திகள்உலகம்

லண்டனில் பலஸ்தீன ஆதரவுக் குழு தடையை எதிர்த்துப் போராட்டம்: 90 பேர் கைது!

பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவொன்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அதற்கு...