18 19
இலங்கைசெய்திகள்

சம்பள அதிகரிப்பு, மானியங்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு

Share

சம்பள அதிகரிப்பு, மானியங்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வகையிலான சம்பள அதிகரிப்புக்கள் மற்றும் மானியங்கள் தற்போதைக்கு வழங்கப்படாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த சம்பள அதிகரிப்புக்களும், மானியங்களும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதியின் பின்னரே வழங்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் அறிவிக்கப்பட்ட திடீர் சம்பள அதிகரிப்புக்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதியின் பின்னர் நடைமுறைப்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு உரிய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட மானியங்கள் நிவாரணங்களையும் தற்போதைக்கு வழங்க வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

அரசாங்கம் யோசனைகளை முன்வைக்க முடியும் எனவும், எனினும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி வரையில் அவற்றை நடைமுறைபடுத்த அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் நீண்ட கால அடிப்படையில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைபடுத்துவதற்கு தடையில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...