6 30
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்கள் செலவிடப்போகும் 5000 மில்லியன் ரூபாய்கள்

Share

ஜனாதிபதி வேட்பாளர்கள் செலவிடப்போகும் 5000 மில்லியன் ரூபாய்கள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக அடுத்த முப்பது நாட்களில் அவர்களின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக 3000 மில்லியன் ரூபாய் முதல் 5,000 மில்லியன் ரூபாய் வரை செலவழிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

களனி ரஜமஹா விஹாரையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், குறிப்பாக நாடு நெருக்கடியில் இருக்கும் போது தேர்தலுக்காக இவ்வளவு பணம் செலவு செய்வது நாட்டுக்கு நல்லதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

மில்லியன் கணக்கான பணத்தை செலவிட்டே தேர்தல் கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் மக்கள் கலந்துகொள்ள செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்

இலங்கையின் நாடாளுமன்றில் உள்ள 225 உறுப்பினர்களையும் மக்கள் ஏற்கனவே நிராகரித்துள்ளனர்.

ஆனால் இதனையறியாத அரசியல்வாதிகள் இன்னும் கூட்டத்தை கூட்டுவதற்கு பணத்தை செலவிடுகிறார்கள் என்று ரட்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தேர்தலில் வேட்பாளர் ஒருவர், வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய நிதி தொடர்பான கூட்டத்தை தேர்தல் ஆணையகம் அண்மையில் கூட்டியபோது, சஜித் பிரேமதாச. ஒரு வாக்காளருக்கு 250 ரூபாய் வீதம் 4.2 பில்லியன் ரூபாயை செலவிடவுள்ளதாக தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவும் 4.2பில்லியன் ரூபாயை செலவிடவுள்ளாக தெரிவித்ததாக ஜனக ரட்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச, வாக்காளர் ஒருவருக்கு 300ரூபாய் வீதம் 5.1 பில்லியன் ரூபாயை செலவிடவுள்ளதாகவும், அனுரகுமார திஸாநாயக்க 200 ரூபாய் வீதம் 3.4 பில்லியன் ரூபாய்களை செலவிடவுள்ளதாகவும் இணக்கம் வெளியிட்டனர்.

எனினும் தாம் ஒரு வாக்காளருக்கு 20 ரூபாய் வீதம் 340 மில்லியன் ரூபாயை செலவிட இணங்கியதாக ஜனக ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பிரசாரங்களுக்கு 3000 மில்லியன் ரூபா முதல் 5000 மில்லியன் ரூபா வரை செலவு செய்வது நாட்டின் கடனில் பாதியை தீர்த்து வைக்க உதவும் என்று குறிப்பிட்ட ரட்நாயக்க, வரி செலுத்தாத வேட்பாளர்களின் கணக்கில் இவ்வளவு பணம் எப்படி உள்ளது என்பதை ஆராய்வது நல்லது என சுட்டிக்காட்டியுள்ளார்

40 வீதமான மக்கள் உணவு வாங்க முடியாத ஒரு நாட்டில், அரசியலுக்கு இவ்வளவு பெரிய தொகையை செலவிடுவது அபத்தமானது என்றும் ஜனக ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Pregnant Child 1200px 25 07 18 1 1000x600 1
செய்திகள்இலங்கை

கர்ப்பிணித் தாய்மார்கள் போதைப்பொருள் பாவனை: குழந்தைகளின் அபாயம் குறித்து அமைச்சர் சரோஜா போல்ராஜ் எச்சரிக்கை!

சமீபகாலமாகப் பெண்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது அதிகரித்து வருவதாகவும், குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

Nine Arch Bridge Ella Sri Lanka 35 1
செய்திகள்இலங்கை

ஒன்பது வளைவுப் பாலம் விளக்குத் திட்டம் ஒத்திவைப்பு: தனியாரின் நிலப் பிரச்சினை காரணம்!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில்...

articles2FjYITDpH4jwEQ9VfnNT42
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் புதிய கிளை அலுவலகம் இன்று திறந்து வைப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளைக்கான புதிய அலுவலகம் இன்று (நவம்பர் 23) காலை,...

images 5 1
செய்திகள்உலகம்

லண்டனில் பலஸ்தீன ஆதரவுக் குழு தடையை எதிர்த்துப் போராட்டம்: 90 பேர் கைது!

பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவொன்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அதற்கு...