7 28
இலங்கைசெய்திகள்

குரங்கு காய்ச்சல் குறித்து இலங்கையில் விழிப்புணர்வை அதிகரித்துள்ள அதிகாரிகள்

Share

குரங்கு காய்ச்சல் குறித்து இலங்கையில் விழிப்புணர்வை அதிகரித்துள்ள அதிகாரிகள்

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் உலகளவில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை அடுத்து, இலங்கையில் விழிப்புணர்வை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தொற்று நோய், தொடர்பில் சர்வதேச ரீதியில் பொது சுகாதார அவசர நிலையை, உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

இலங்கை சுகாதார அமைச்சின் தகவல்களின்படி, குரங்கு காய்ச்சலின் உடனடி அச்சுறுத்தல் குறைவாக உள்ளது. இருப்பினும், மேலதிக கண்காணிப்புக்கான நடவடிக்கைகளை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

இதன்படி, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் அதிக கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நோய், பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும்.

இது பொதுவாக காய்ச்சல், சொறி மற்றும் வீங்கிய நிணநீர் கணுக்கள் ஆகியவற்றுடன் வெளிப்படுகிறது மற்றும் பல்வேறு மருத்துவ சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

உடலில் ஏற்படும் காயங்களுடன் நேரடியாக பரவும். அதேநேரம் பாதிக்கப்பட்ட நபரின் அசுத்தமான ஆடை போன்ற பொருட்களுடன் மறைமுக தொடர்பு மூலமாகவும் இது பரவுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...