1 1
இலங்கைசெய்திகள்

யாழில் வீதியில் மயங்கி விழுந்த முதியவர் உயரிழப்பு

Share

யாழில் வீதியில் மயங்கி விழுந்த முதியவர் உயரிழப்பு

யாழில் (Jaffna) கடற்கரை வீதியில் மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (01) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – ஈச்சமோட்டையை சேர்ந்த 75 வயதான க. கியூமர் என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார்.

குறித்த முதியவர், கடந்த 27ஆம் திகதி பிறந்தநாள் நிகழ்வு ஒன்றுக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் கடற்கரை வீதியூடாக வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதன்போது, அவருக்கு திடீரென தலைச்சுற்று ஏற்பட்டு கீழே விழுந்துள்ள நிலையில் இரவு 8 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் அவர் உயிரிழந்துள்ளதுடன் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இதற்கமைய, தலையில் அடிபட்டதாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரிய வந்துள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
1737780894 1737780362 yoshitha L
அரசியல்இலங்கைசெய்திகள்

யோஷித ராஜபக்ஷவின் பாட்டியின் மனநிலை பரிசோதனை: பணச் சலவை வழக்கு விசாரணை பெப்ரவரி 9 வரை ஒத்திவைப்பு!

பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்...

Ajith Nivard Cabraal
அரசியல்இலங்கைசெய்திகள்

கிரேக்க பிணைமுறி வழக்கு: மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுடன் மூவர் விடுதலை!

2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரேக்க பிணைமுறி வழக்குடன் (Greek Bonds Case) தொடர்புடைய குற்றச்சாட்டுகளிலிருந்து...

images 21
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மீகஹகிவுல பிரதேசத்தில் மீண்டும் நிலச்சரிவு: உயிர்ச்சேதம் இல்லை!

மீகஹகிவுல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மொரஹெல – மீகொல்ல பகுதியில் உள்ள ஒரு நிலச்சரிவு அபாயம்...