12 14
இலங்கைசெய்திகள்

பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு

Share

பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு

பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் தற்போதும் ரணில் விக்ரமசிங்கவுக்கே காணப்படுகின்றது என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “பொலிஸ் மா அதிபரை தான் நியமிக்க முடியாது என்று சொல்வதை ஏற்க முடியாது ரனில் விக்ரமசிங்க ஐந்து முறை பிரதமராகவும் தற்போது ஜனாதிபதியாகவும் 47 வருட அரசியல் வாழ்க்கையில் நாட்டிற்கு எதையும் செய்யவில்லை.

நாட்டிலே ஜூலை மாதத்திலே 41 வருடத்திற்கு முன்னர் நடந்த ஜூலை கலவரத்திற்கு இவர்களின் ஐக்கிய தேசியக் கட்சியே காரணமாக இருந்து தமிழ் மக்களின் சொத்துக்களையும் உயிர்களையும் பறித்தது.

இவ்வாறாக தமிழ் மக்களுக்கு விரோதமான செயற்பாட்டை செய்த தேசியக் கட்சி கடந்த தேர்தலில் ஒரு ஆசனத்தை பெறக் கூட முடியாத ஐக்கிய தேசியக் கட்சி, கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய காலப்பகுதிக்கு ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தற்போது தனது பதவியை தக்க வைப்பதன் நோக்கம் ஊழல் நிறைந்த ராஜபக்ச ஆட்சியினரை காப்பாற்றுவதற்காகவே இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

உலகமே வியந்து பார்க்கின்ற மோசடி விவகாரத்தில் ரணில் விக்ரமசிங்க தனது நண்பர்களை பாதுகாப்பதற்காக இவ்விடயத்தை மூடி மறைத்து நாட்டுக்கு துரோகச் செயலை செய்தார்.

இவ்வாறாக நாட்டுக்கு பல துரோகம் இழைத்த ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக வந்தால் நாடு மீண்டும் சிக்கலான நிலைமைக்கு மாறும்.

எனவே இவ்வாறான ஊழல்களை ஒழித்துக்கட்டும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவை மக்கள் தெரிவு செய்து அவரை நாட்டின் ஜனாதிபதியாக முயற்சி செய்ய வேண்டும்“ என்றும் மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...