11 16
இலங்கைசெய்திகள்

அமெரிக்க மெம்பிஸ் விலங்கினச்சாலையின் ஆராய்ச்சி நிலையம் இலங்கையில்

Share

அமெரிக்க மெம்பிஸ் விலங்கினச்சாலையின் ஆராய்ச்சி நிலையம் இலங்கையில்

அமெரிக்காவின் மெம்பிஸ் (Memphis) விலங்கினச்சாலை, இலங்கையில் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் ஆராய்ச்சி நிலையத்தை இலங்கையில் செயற்பட வைப்பதே மெம்பிஸ் விலங்கினச்சாலையின் இலக்காகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் எதிர்வரும் நவம்பரில் ஒரு முறையான திறப்பு நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையம் உயிரினங்களின் ஆராய்ச்சி, பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஒரு தளத்தை வழங்கும், மேலும் உள்ளூர் பல்கலைக்கழகங்கள் மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்களுக்கான ஆதாரமாக செயற்படும் என்று அமெரிக்க ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் இலங்கை, வெப்பமண்டல காலநிலை மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்பு ஆகியவற்றை கொண்டிருப்பதன் காரணமாக, பல்லுயிர் பன்முகத்தன்மையை கொண்டுள்ளது.

இருப்பினும் காடழிப்பு மற்றும் நில மாற்றம் இந்த தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பை அச்சுறுத்துவதாக மெம்பிஸ் கருதுகிறது.

இந்தநிலையில், இலங்கையின் பல்லுயிர் மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் தொடர்பிலேயே மெம்பிஸின் இலங்கை நிலையம் செயற்படவுள்ளது.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...