24 66a4612a03b7b
இலங்கைசெய்திகள்

விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிச் சடங்கு: விடை பெறும் தமிழ் மக்களுக்காக ஒலித்த குரல்

Share

விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிச் சடங்கு: விடை பெறும் தமிழ் மக்களுக்காக ஒலித்த குரல்

நவ சம சமாஜ கட்சியின் மறைந்த தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் (Wickramabahu Karunaratne) இறுதிச் சடங்கு இன்று இடம்பெறவுள்ளது.

பொரளை (Borella)– பொதுமயானத்தில் இன்று (27.7.2024) பிற்பகல் 5 மணிக்கு இறுதிக் கிரியை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்த நவ சம சமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன கடந்த புதன் கிழமை காலமானார்.

மறைந்த விக்ரமபாகு கருணாரத்ன தமிழர் பிரச்சினைகளில் எப்போதும் ஒரே கொள்கையை கடைப்பிடித்து அது தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்துவந்தவர்களில் ஒருவர் ஆவார்.

அத்துடன் இன பிரச்சினையை தீர்க்கும் எண்ணம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியப் பிரச்சினை தொடர்பான தீர்வில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறிவந்திருந்திருந்தார்.

மேலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனவர்கள் தொடர்பான நம்பிக்கை, இராணுவ கையிருப்பில் உள்ள நிலங்களை மக்களுக்கு மீள கையளித்தல் போன்ற விடயங்களை தனது அதிகாரத்தை கொண்டு தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் இவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பொரளை மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 1
இலங்கைசெய்திகள்

உடுகம்பொல சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு: ‘உயரதிகாரியின் சகோதரி’ எனக் கூறியவர் போலியானவர் என பொலிஸ் உறுதி!

உடுகம்பொல வாரச் சந்தைக்கு அருகில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த பெண்...

25 68fb2b3437459 1
இலங்கைசெய்திகள்

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை வழக்கு: துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் காட்டுப் பகுதியில் மீட்பு!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவைக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், புத்தல...

MediaFile
செய்திகள்இந்தியா

ஆந்திராவில் சோகம்: ஏகாதசி தரிசனத்தின்போது நெரிசலில் சிக்கி 12 பேர் பலி!

ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா பகுதியில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் ஏகாதசியை...

22 62b8ed5ad030a
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை குறைந்தாலும் முச்சக்கர வண்டிக் கட்டணம் திருத்தப்படாது: முறையான ஒழுங்குமுறை இல்லாததே காரணம் – சங்கம் அறிவிப்பு!

எரிபொருள் விலைத் திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் எந்தவிதத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அகில...