tamilni Recovered 5 scaled
இலங்கைசெய்திகள்

பணத்திற்காக வரலட்சுமி திருமணம் செய்துகொண்டாரா?.. பதிலடி கொடுத்த சரத்குமார்!!

Share

பணத்திற்காக வரலட்சுமி திருமணம் செய்துகொண்டாரா?.. பதிலடி கொடுத்த சரத்குமார்!!

பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

அண்மையில் இவர் மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

வரலட்சுமி, நிக்கோலாயை காசுக்காக தான் திருமணம் செய்துகொண்டார், நிகோலய் ஆபத்தானவர் போன்ற நெகடிவ் கருத்துக்களை சிலர் கூறி வந்தனர். அதுமட்டுமின்றி நிகோலய் -வின் உடல் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்து வந்தனர்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சரத்குமார், தனது மகள் திருமணத்தில் எழுந்த தவறான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

அதில் அவர் பேசுகையில், நான் சமூக வலைத்தளங்களில் கவனித்து வருகிறேன். அவர்களுடைய நேரம் போக வேண்டும் என்பதற்காக மற்றவர்களின் வாழ்க்கையை விமர்சித்து வருகிறார்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் நேரில் வந்து பேச வேண்டும்.. இப்படி மறந்து இருந்து பேசுபவர்களுக்கு என்ன தைரியம் இருக்கிறது?

நான் மகளுக்காக மட்டும் பேசவில்லை எல்லா பெண்களுக்காகவும் தான் பேசுகிறேன். உங்கள் மனதில் எழும் கற்பனையை வைத்துக்கொண்டு மற்றவர்களை கன்னாபின்னாவென பேசுவதற்கு உரிமை யார் கொடுத்தது?.

நான் எப்போதும் நெகடிவ் கமெண்ட் பார்க்க மாட்டேன். ஆனால் சிலர் இந்த மாதிரி நெகட்டிவ் கருத்துக்களை பகிர்வது மனதளவில் கஷ்டமாக இருக்கிறது. என்னுடைய மகள் பணத்திற்காக திருமணம் செய்து இருக்கிறார்கள் என்று சொல்லி கொண்டு இருக்கிறார். அதற்கு நான் கவலை கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.

வரலட்சுமி எதற்காக திருமணம் செய்துகொண்டார் என்பது அவருடைய முடிவு. அவர் நிக்கோலாயை மனதார பிடித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் சிலர் தவறாக கமெண்ட் செய்துகொண்டு நேரத்தை வீணடித்து கொண்டு இருக்கிறார்கள் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
121664732
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சை மாணவி 3 மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை முயற்சி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வைத்தியசாலையில் அனுமதி!

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி ஒருவர் இன்று...

images 2 3
செய்திகள்இலங்கை

நினைவேந்தல் காணி விவகாரம்: இரு தரப்பினரும் ஒற்றுமையாக வாருங்கள்; இல்லையேல் நல்லூர் நிலம் வழங்கப்படாது – முதல்வர் மதிவதனி அதிரடி அறிவிப்பு!

நவம்பர் 27 நினைவேந்தல் நிகழ்வைக் கொண்டாடுவது தொடர்பாகக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இன்மையால், இரு தரப்பினருக்கும்...

bk7qlddg hamas afp 625x300 19 February 25
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: 15 பாலஸ்தீனிய உடலங்களுக்குப் பதிலாக மேலும் ஒரு இஸ்ரேலிய வீரரின் உடலை ஹமாஸ் ஒப்படைத்தது!

எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற அபாயத்தில் இருக்கும் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அமுலாக்கம் தொடர்ந்து...

251107 Olivier Rioux ch 1044 acd69e
உலகம்செய்திகள்

7 அடி 9 அங்குல உயர கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ: உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux),...