18 2
இலங்கைசெய்திகள்

வேகக்கட்டுப்பாடு தொடர்பில் வெளியாகவுள்ள வர்த்தமானி

Share

வேகக்கட்டுப்பாடு தொடர்பில் வெளியாகவுள்ள வர்த்தமானி

வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் வேகத்தடை தொடர்பான விதிமுறைகளுடன் கூடிய வர்த்தமானி அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டில் 2,214 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு இதன் விளைவாக 2,321 இறப்புகள் ஏற்பட்டுள்ளன என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1,103 சாலை விபத்துகள் இடம்பெற்றுள்ளதோடு 1,154 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், வீதி விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் எமது அமைச்சு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

வீதிப்பாதுகாப்புக்கான தேசிய சபை வேகக் கட்டுப்பாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக ரூ. 50 மில்லியனை இலங்கை பொலிஸாருக்கு வழங்கியுள்ளது .

இந்நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் புதிய வேகக்கட்டுப்பாடு வரம்பு விதிமுறைகளுடன் கூடிய வர்த்தமானியை போக்குவரத்து அமைச்சகம் வெளியிடும் என்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...