24 66892ddc8d2f7
இலங்கைசெய்திகள்

இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான புதிய திட்டம்

Share

இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான புதிய திட்டம்

பவர் கிரீட் எனப்படும் மின்சார இணைப்புத் திட்டத்தை செயற்படுத்துவதற்கு இலங்கையும் இந்தியாவும் (India) கூட்டு முயற்சி ஒன்றை மேற்கொள்ள தயாராகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, இலங்கை மற்றும் இந்தியா இரண்டு நாடுகளும் கடலுக்கடியில் மின்சாரம் வழங்கும் பாதையை இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டமானது, இலங்கையின் அனுராதபுரத்தையும் (Anuradhapura), இந்தியாவின் தமிழ்நாட்டின் (Tamil Nadu) தலைநகரான சென்னையையும் நேரடி மின்பாதை மூலம் இணைக்கும்.

அதேவேளை, இந்தியாவில் 130 கிலோமீற்றர் நிலப்பரப்பு பாதைக்கு அப்பால் இலங்கையின் வடக்கு – கிழக்கு, குறிப்பாக மன்னார் – திருக்கேதீஸ்வரத்துக்கு கடலுக்கடியில் ஒரு பாதை (நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்) வழியாக இந்த இணைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

விரிவான திட்ட அறிக்கையை தொடர்ந்து, இரு தரப்பும் இப்போது வணிக மாதிரியின் படி திட்டத்தை செயற்படுத்த கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

மேலும், இலங்கையில் உற்பத்தி செய்யப்படவுள்ள காற்றாலை மற்றும் சூரிய மின்சாரத்தை மையப்படுத்தியே இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இந்த மின்சார இணைப்புத் திட்டம் அமைகிறது என தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
11 8
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி: சந்தை ஆய்வாளர்கள் தகவல்!

கடந்த வாரம் ஈரான் – இஸ்ரேல் பிராந்திய மோதல்களினால் உச்சத்தை எட்டியிருந்த தங்கத்தின் விலையானது, இந்த...

10 8
செய்திகள்உலகம்

ஈரானுடனான போரில் முழுமையான வெற்றி பெறும் வரை பின்வாங்க மாட்டோம்: அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை!

ஈரானுடனான தற்போதைய இராணுவ மோதலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான எந்தவொரு தூரத்திற்கும் செல்ல அமெரிக்கா தயாராக...

09 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சமூக வலைத்தள காணொளி மூலம் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான சாரதி: மோட்டார் சைக்கிளுடன் இளைஞர் கைது!

பொது வீதிகளில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், விபத்துக்களைத் தூண்டும் விதமாகவும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய...

08 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நடப்பாண்டின் முதல் இரு மாதங்களில் 422 பேர் சாலை விபத்துக்களில் பலி!

இலங்கையில் இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த மார்ச் 2-ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள...