24 667f7cfe0ff26 21
இலங்கைசெய்திகள்

சீன மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

Share

சீன மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

சீன (China) வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியும் (Wang Yi), இந்திய (India) வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் (Jaishankar) நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

குறித்த சந்திப்பு இன்று (04) கஜகஸ்தானில் (Kazakhstan) இடம்பெற்றுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 24 ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்க, இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார்.

இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்யி-யை, அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டில் இந்தியா-சீன எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையிலான மோதல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதன்போது, இருவரும் எல்லை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து சிறிது நேரம் கலந்துரையாடியதுடன், புகைப்படமும் எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) பங்கேற்க இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், மோடியின் ரஷ்ய (Russia) பயணம் காரணமாக ஜெய்சங்கர் இதில் பங்கேற்றிருக்கிறார்.

இந்த சந்திப்பு இரு நாட்டுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
24 2
இலங்கைசெய்திகள்

திருமணத்திற்கு பணம் திரட்டுவதற்காக இளைஞர்கள் செய்த மோசமான செயல்

கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள பழங்கால விகாரையில் புரதான பித்தளை விளக்கை திருடிய குற்றச்சாட்டில் 3 பேர்...

25 2
இலங்கைசெய்திகள்

மகிந்த ராஜபக்ச தூக்கிலிடப்பட வேண்டும்! விமல் பரபரப்பு கருத்து

முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகா கூறுவது போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

21 2
இலங்கைசெய்திகள்

நாட்டை மீட்க அர்ப்பணிப்பான சர்வதிகாரி தேவை : வலியுறுத்தும் சரத் பொன்சேகா

இலங்கையை மீட்பதற்கு, நாட்டை நேசிக்கக்கூடிய – அர்ப்பணிப்பான சர்வாதிகாரி அவசியம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்...

23 2
இலங்கைசெய்திகள்

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள்பரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது....