tamilni 9 scaled
இலங்கைசெய்திகள்

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு

Share

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைப்புக்கு வர்த்தக மாஃபியாக்கள் இடையூறாக இருப்பதாக அகில  இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

பேக்கரி பொருட்களின் விலையினை நுகர்வோருக்கு நன்மை ஏற்படும் வகையில் குறைக்க கூடிய நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உண்மையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தமது சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலையினை மேலும் 30 ரூபாவினாலும், முட்டை ஒன்றின் விலையை 20 ரூபாவினாலும் குறைக்க முடியும். எனினும் வர்த்தக மாஃபியாக்கள் அதில் இலாபம் ஈட்டும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை கோதுமை மா, தேங்காய் எண்ணெய், முட்டை உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளுக்கு தேவையான பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இது தமது தொழிற்துறையை பாரியளவில் பாதித்துள்ளதாலேயே, பேக்கரி உற்பத்திகளின் விலையினை குறைக்க முடியாதுள்ளது.

எனவே இது தொடர்பில் விளக்கமளிப்பதற்கு சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1732374016 images 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: மலைப்பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை ஆகிய...

24514649 rain
செய்திகள்விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் டி20 ரத்து செய்யப்பட்ட போட்டியின் நுழைவுச்சீட்டுகள் நாளை செல்லுபடியாகும்!

மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டிக்காக...

AP01 10 2026 000005B
செய்திகள்உலகம்

என்னை விட நோபல் பரிசுக்குத் தகுதியானவர் எவருமில்லை: இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பாரிய போர் அபாயத்தைத் தான் தடுத்து நிறுத்தியதாகவும், அதன் அடிப்படையில்...

06 1
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ஆம் ஆண்டு இலங்கையின் பாரிய வீட்டு நிர்மாண ஆண்டு: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பிரகடனம்!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறிய மக்களுக்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ்,...