21 5
இலங்கைசெய்திகள்

உலகம் முழுவதும் தமிழ் மொழியை கொண்டு சென்றவர்கள் இலங்கை தமிழர்களே

Share

உலகம் முழுவதும் தமிழ் மொழியை கொண்டு சென்றவர்கள் இலங்கை தமிழர்களே

உலகம் முழுவதும் தமிழ் மொழியை கொண்டு சென்றவர்கள் இலங்கை தமிழர்களே என முன்னாள் இந்திய துணை தூதர் நடராஜன் (Nadarajan) தெரிவித்துள்ளார்.

அண்மையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச தமிழ் கலாசார மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “இந்தியா இலங்கைக்கு பெரியண்ணன் என்று கூறுவார்கள் ஆனால் இந்தியா இலங்கைக்கு பெரியண்ணன் அல்ல இந்தியாவும் இலங்கையும் இரட்டைச் சகோதரர்கள் என்று தான் கூற வேண்டும்.

சமீபத்தில் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் நிகழ்விற்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வந்திருந்தார்.

தற்போது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாக பக்கத்து நாடுகளுடனான உறவே முக்கியமாக இருக்கிறது.

பத்து நாடுகளில் நான் பணி புரிந்த அனுபவங்களை புத்தகமாக எழுதி அதை மட்டக்களப்பில் வெளியிட்டுள்ளேன்.

இந்த புத்தகத்தில் இலங்கையில் நான் பணியாற்றிய அனுபவங்களையும், போர் காலத்தில் மக்கள் எவ்வளவு அவதிப்பட்டனர், போர்க்களத்தில் நடந்த பல வெளிவராத சம்பவங்களையும் பதிவு செய்துள்ளேன்.

அத்துடன் கிழக்கு மாகாணம் தொடர்பாக சிறு குறிப்பும் எழுதியுள்ளேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...