4 8
இந்தியாஇலங்கைசெய்திகள்

விமான பயணிக்கு உணவில் காத்திருந்த அதிர்ச்சி: மன்னிப்புக் கோரிய ஏர் இந்தியா

Share

விமான பயணிக்கு உணவில் காத்திருந்த அதிர்ச்சி: மன்னிப்புக் கோரிய ஏர் இந்தியா

கடந்த வாரம் ஏர் இந்தியா பெங்களூர்(Bengaluru) – சான் பிரான்சிஸ்கோ(San Francisco) விமானத்தில் பயணித்த ஒருவரின் உணவில் உலோகத் தகடு(blead) ஒன்று காணப்பட்டுள்ளது, அதற்காக ஏர் இந்தியா(Air India) விமான நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

இந்த சம்பவம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான AI 175 விமானத்தில் இடம்பெற்றுள்ளது.

பெங்களூரில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நோக்கி சென்ற விமானத்தில் குறித்த பயணி பயணித்துள்ளார்.

பயணத்தின் இடையே பயணிக்கு ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, வழங்கப்பட்ட உணவில் உலோகத் தகடு ஒன்று இருப்பதை அவர் கண்டறிந்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம்,

“உணவில் உலோகத் தகடு இருப்பதை பயணி கண்டுபிடித்தது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்பதுடன் உணவு விநியோகம் செய்யும் நிறுவனம் இயந்திர கத்திகளை கொண்டு காய்கறிகளை வெட்டும் போது அதில் ஒரு பகுதி உடைந்து விழுந்து இருக்கலாம்” என விளக்கம் அளித்துள்ளது.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...

25 6939a5588b95b
இலங்கைசெய்திகள்

மூன்றாம் தவணையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைமை இல்லை: பரீட்சைகள் இரத்து!

இந்த ஆண்டு மூன்றாம் தவணை முடிவில் பாடசாலை மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மதிப்பெண் வழங்கும் முறைமை...

images 5 4
இந்தியாசெய்திகள்

13 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு...