26 695b472ef2261
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் தமிழர் நிமோனியாவால் உயிரிழப்பு: சோகத்தில் வட்டுக்கோட்டை!

Share

கனடாவிலிருந்து விடுமுறைக்காகத் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த 42 வயதுடைய நபர் ஒருவர், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கனடாவில் வசித்து வந்த பரமநாயகம் திவாகர் (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். அண்மையில் விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்த இவர், வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள உறவினர் இல்லத்தில் தங்கியிருந்துள்ளார்.

கடந்த டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி இவருக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து அவர் உடனடியாகத் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில், நிமோனியா (Pneumonia) காய்ச்சலே அவரது மரணத்திற்குப் பிரதான காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் புலம்பெயர் உறவினர்கள் மற்றும் வட்டுக்கோட்டைப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
mini
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார சற்றுமுன் கைது!

  கையூட்டல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்...

gold
இலங்கை

மீண்டும் மீண்டும் குறைவடையும் தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் தங்க முதலீட்டாளர்கள்!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று மேலும் சரிவடைந்துள்ளது. அதன்படி, நேற்றைய தினம் 24 கரட் தங்கம்...

policeee
இலங்கை

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் எடுத்து வரப்பட்ட சிறை அதிகாரிகளின் உடலங்கள் – வெலிக்கடையில் இறுதி அஞ்சலி.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் சிறை சிறப்பு நடவடிக்கை பிரிவின் 7 அதிகாரிகள் சிறைக்கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு...

dengue original
இலங்கை

மீண்டும் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் – உயர்வடையும் உயிரிழப்புகள்.

இலங்கையில் இந்த வருடம் இது வரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,839 ஆக...