இலங்கை
மக்களுக்கு விசேட தொலைபேசி இலக்கம்: பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
![மக்களுக்கு விசேட தொலைபேசி இலக்கம்: பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு 1 24 6664fc6d2a63d](https://b3217245.smushcdn.com/3217245/zeepsoza/2024/06/24-6664fc6d2a63d.jpg?lossy=2&strip=1&webp=1)
மக்களுக்கு விசேட தொலைபேசி இலக்கம்: பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
ரஷ்யாவிற்கு(Russia) சட்டவிரோதமாக நாடு கடத்தப்படும் வீரர்கள் தொடர்பில் தெரிவிக்க பாதுகாப்பு அமைச்சு தொலைபேசி இலக்கமொன்றை அறிவித்துள்ளது.
இது தொடர்பான எந்தவொரு தகவலையும் 011 2 44 11 46 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ரஷ்யா – உக்ரைன்(Ukraine) போருக்காக ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ வீரர்களை கடத்தியமை தொடர்பில் இதுவரை 486 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ரஷ்யா – உக்ரைன் போருக்காக ஓய்வு பெற்ற இலங்கை(Sri lanka) இராணுவ வீரர்களை கடத்துவது குறித்து ஆலோசிக்க இலங்கை தூதுக்குழு ரஷ்யா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்மாதம் 25ஆம் திகதி குறித்த குழு ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓய்வுபெற்ற இலங்கை இராணுவத்தினரின் கடத்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அதிகாரிகள் குழு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை இராணுவ வீரர்ககள் இந்த குழுவில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, பாதுகாப்பு செயலாளர் நாயகம் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் சமன் வீரசிங்க ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.