24 665955f1ce1d1
இலங்கைசெய்திகள்

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் மதத்தீவிரவாதிகள் அல்லர்: இலங்கை

Share

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் மதத்தீவிரவாதிகள் அல்லர்: இலங்கை

கடந்தவாரத்தில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஐ.எஸ் உடன் தொடர்புடைய இலங்கையர்கள் மதத் தீவிரவாதிகள் என்பதற்கான பதிவுகள் இல்லை என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன (Kamal Gunaratne) தெரிவித்துள்ளார்.

கிழக்கில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “கைது செய்யப்பட்ட நால்வரும் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள். மேலும், அவர்கள் மதத் தீவிரவாதிகள் என்பதற்கான பதிவுகள் இல்லை.

அதேவேளை, அவர்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அவர்கள் பற்றிய கூடுதல் விபரங்களை வெளியிடுவது சரியான தீர்மானமாக இருக்காது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...