24 6652b820205d7
இலங்கைசெய்திகள்

கொழும்பில் கொலை செய்யப்பட்ட இளைஞன் – சினிமா பாணியில் கொடூரம்

Share

கொழும்பில் கொலை செய்யப்பட்ட இளைஞன் – சினிமா பாணியில் கொடூரம்

கொழும்பில் இளைஞர் ஒருவர் கும்பல் ஒன்றினால் கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் பேஸ்லைன் வீதி பண்டாரநாயக்க சுற்றுவட்டத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்றுள்ளது.

காதல் உறவில் ஏற்பட்ட தகராறு காரணமாக கும்பல் ஒன்று கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞனை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

வெசாக் தோரணத்தை பார்வையிடுவதற்காக நண்பர்களுடன் ஒருகுடவத்தை நோக்கி சென்ற வேளையில் இந்த தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புவர்கள் என்ற சந்தேகத்தில் 17 மற்றும் 18 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...