24 664b156ae0096
இலங்கைசெய்திகள்

எலன் மஸ்க்கின் இலங்கை விஜயம்: ரணில் விடுத்துள்ள அழைப்பு

Share

எலன் மஸ்க்கின் இலங்கை விஜயம்: ரணில் விடுத்துள்ள அழைப்பு

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) அழைப்பின் பேரில், எலன் மஸ்க் (Elon Musk) இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.

இந்தோனேஷியாவிற்கு (Indonesia) இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, எலன் மஸ்க்கை நேற்று (19) சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

குறித்த கலந்துரையாடலின் போது இலங்கையில் ஸ்டார்லிங்க் (Starlink) இணைய வசதி சேவையை ஆரம்பிக்க முதலீடு செய்யுமாறு அதிபர், எலன் மஸ்க்கிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கையின் கிராமிய கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு ஸ்ரார்லிங்க் இணைய வசதி சேவை முக்கியமாக அமையும் எனவும் அதிபர், எலன் மஸ்க்கிடம் தெரிவித்திருந்தார்.

ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கையை, ஏற்றுக்கொண்ட எலன் மஸ்க் ஸ்டார்லிங்க் செய்மதி இணைய வசதி சேவையை ஆரம்பிக்க இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.

எனினும், இலங்கைக்கு விஜயம் செய்யும் திகதி இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அது தொடர்பில் எலன் மஸ்க் தரப்புடன் இலங்கை அதிகாரிகள் தொடர்புகளை பேணி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...