24 663051f6ce167
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியின் புதிய திட்டம்! நாட்டுக்கு பல மில்லியன் டொலர்கள்

Share

ஜனாதிபதியின் புதிய திட்டம்! நாட்டுக்கு பல மில்லியன் டொலர்கள்

நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளை தயார்படுத்துவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அடுத்த புரட்சி என வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரதேச விவசாயிகளுக்கு நவீன விவசாய உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,இதேவேளை புத்திசாலித்தனமான விவசாய நடவடிக்கைகள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB ) வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

அவரது வேண்டுகோளுக்கு இணங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த உடன்பாட்டை எட்டியுள்ளது என்று மேலும் கூறியுள்ளார்.

மக்களின் எழுச்சிக்கு மானியம் வழங்குவதல்ல, சுதந்திரமாக எழுந்து நிற்பதற்கான பலத்தை வழங்குவதே முக்கியம்.

காலாவதியான விவசாய முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும், நாட்டில் உள்ள விவசாயிகள் சமூகத்திற்கு நவீன விவசாய முறைகளை அறிமுகப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
11 8
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி: சந்தை ஆய்வாளர்கள் தகவல்!

கடந்த வாரம் ஈரான் – இஸ்ரேல் பிராந்திய மோதல்களினால் உச்சத்தை எட்டியிருந்த தங்கத்தின் விலையானது, இந்த...

10 8
செய்திகள்உலகம்

ஈரானுடனான போரில் முழுமையான வெற்றி பெறும் வரை பின்வாங்க மாட்டோம்: அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை!

ஈரானுடனான தற்போதைய இராணுவ மோதலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான எந்தவொரு தூரத்திற்கும் செல்ல அமெரிக்கா தயாராக...

09 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சமூக வலைத்தள காணொளி மூலம் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான சாரதி: மோட்டார் சைக்கிளுடன் இளைஞர் கைது!

பொது வீதிகளில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், விபத்துக்களைத் தூண்டும் விதமாகவும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய...

08 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நடப்பாண்டின் முதல் இரு மாதங்களில் 422 பேர் சாலை விபத்துக்களில் பலி!

இலங்கையில் இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த மார்ச் 2-ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள...