24 6627165564cc2
இலங்கைசெய்திகள்

வீதியில் அலைந்து திரிந்த பெண்மணி : பிரதேச மக்களின் நெகிழ்ச்சி செயல்

Share

வீதியில் அலைந்து திரிந்த பெண்மணி : பிரதேச மக்களின் நெகிழ்ச்சி செயல்

குருணாகலில் வீதியில் தனித்து நின்ற வயோதிப பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று விடும் பணியில் பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தம்மிட பிரதேசத்தில் வசிக்கும் சுமார் 90 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

படல்கம காசிவத்த பகுதியில் குறித்த பெண் சுற்றித் திரிந்த போது, ​​பிரதேசவாசிகள் அவர் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பின்னர் படல்கம பொலிஸ் அதிகாரிகள் வந்து பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கேகாலை பிரதேசத்தில் இருந்து தான் அந்தப் பகுதிக்கு வந்ததாக அவர் அங்கு தெரிவித்துள்ளார். அதற்கமைய, அந்த பெண்ணை அவரது வீட்டில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த பெண்ணை இரண்டு நாட்களாக பிரதேசவாசிகள் தேடி வந்ததாகவும் அவர் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
16 2
இலங்கைசெய்திகள்

திடீரென்று பதவி விலகிய பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) தனது பதவியை விட்டு விலகியுள்ளார். பிரேன்கொய்ஸ் பெய்ரூவின்...

17 2
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியவர் விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்...

18 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக...

19 1
இலங்கைசெய்திகள்

மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற மூன்று பெண்கள் கோர விபத்தில் பலி

கம்பளை, டோலுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் காயமடைந்துள்ளார். சாலையைக்...