24 661e01924fff2
இலங்கைசெய்திகள்

இலங்கை அரசாங்கம் ரஷ்ய இராணுவத்திடம் கோரிக்கை

Share

இலங்கை அரசாங்கம் ரஷ்ய இராணுவத்திடம் கோரிக்கை

இலங்கை அரசாங்கம் ரஷ்ய இராணுவத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த படையினர், ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ளனரா என்தபனை கண்டறிந்து அறிவிக்குமாறு கோரியுள்ளது.

ரஷ்யாவிற்கான இலங்கையின் பேராசிரியர் ஜனிட்டா லியனகே அதிகாரபூர்வமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இலங்கைப் படையினர் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொண்டு போரில் ஈடுபட்டு வருவதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

குறிப்பாக சம்பளத்திற்காக ரஷ்ய படையில் இணைந்து கொண்ட சில இலங்கைப் படையினர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இலங்கைப் படைப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ளனரா என்பது குறித்த தகவல்களை தாம், ரஷ்ய இராணுவத்திடம் கோரியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் சில முன்னாள் படையினர் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொண்டிருக்கலாம் என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேணல் நலின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சட்டவிரோதமான முறையில் செயற்படுவதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து படையினருக்கு தெளிவூட்டப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூடுதல் தொகையில் சம்பளம் வழங்கப்படும் என கூறப்பட்டு படையில் இணைத்துக் கொள்ளப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், போரில் உயிரிழந்தால் நட்டஈடு கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...